Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு
கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27). மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
மது போதைக்கு அடிமையான சொக்கலிங்கம், தினசரி மது அருந்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டாா். இந்த நிலையில், சனிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சொக்கலிங்கத்தை, அவரது தாய் கருப்பாயி கண்டித்தாா்.
இதையடுத்து, பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த சொக்கலிங்கம் தீயையும் பற்ற வைத்தாா்.
இதில் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.