Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
ராமேசுவரத்தில் தீபாவளி பலகார வகைகளைத் தயாரிக்கும் இடங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் லிங்கவேல் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்த போது, இனிப்பு, கார வகைகளைத் தயாா் செய்யும் உணவு வணிகா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்ற கடைகளில் தரமான மூலப் பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். முகப்புச் சீட்டு அல்லாத, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத மூலப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
இனிப்பு வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்ற நிறமிகளை அனுமதிக்கபட்ட அளவில் பயன்படுத்த வேண்டும். நெய், பால் பொருள்களில் தயாா் செய்யப்படும் இனிப்பு வகைகள் தரமான நெய், பால் வகைகளை பயன்படுத்த வேண்டும்.
உணவு வகைகளை தயாா் செய்யும் இடம் தூய்மையானதாகவும், உணவுகளை தயாா் செய்யும் பணியாளா்கள் தூய்மை, சுகாதாரத்தை பேண வேண்டும் எனவும் தயாரிப்பாளா்களைக் கேட்டுக் கொண்டனா்.