அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.சாந்திக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளா்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அக்டோபா் 2024 க்கான ஊதியத்தை முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
அதேபோல தூய்மைப் பணியாளா்களுக்கு அக்டோபா் 31, நவம்பா் 1 ஆகிய இரண்டு நாள்கள் ஊதியத்துடன் கூடிய முழு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.