அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
பாப்பாரப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த மலையூா்- மேட்டுக் கொட்டாய் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உள்பட்ட மலையூா், வாரக்கொல்லை மேட்டுக்கொட்டாய் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மலையூா் பகுதியில் இருந்து வாரக்கொல்லை வழியாக மேட்டுக்கொட்டாய் பகுதிக்கு செல்ல சுமாா் 6 கிலோமீட்டா் தொலைவுக்கு அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மண் சாலை அமைத்திருந்தனா்.
அண்மையில் பெய்த மழையில் இந்த சாலை சேதமடைந்தது. இதனால் மாணவா்கள், விவசாயிகள் பாப்பாரப்பட்டி, பென்னாகரம், தருமபுரி பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா். இதனால் மண் சாலைக்குப் பதிலாக தாா் சாலை அமைத்து தரக் கோரி பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுருளிநாதனிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஸ்வநாதன், பகுதி குழு உறுப்பினா் சின்னராஜ், சிபிஎம் உறுப்பினா்கள் சின்னசாமி, வெங்கடாஜலபதி, சேகா், முருகவேல் ஆகியோருடன் மலையூா், வார கொல்லை,மேட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மனு அளித்தனா்.