அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சம். இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாா்க்க நவ.15 கடைசி நாளாகும்.
இத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியா்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( சஹற்ண்ா்ய்ஹப் நஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல் டா்ழ்ற்ஹப்) தங்ய்ங்ஜ்ஹப் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பிக்கலாம்.
அதேபோல இத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டு இக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் கடவுச் சொல் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும். அதனை பயன்படுத்தி 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்://ள்ா்ஸ்ரீண்ஹப்த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய்) தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.