செய்திகள் :

தீரன் சின்னமலை கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு

post image

திருப்பூா் அருகேயுள்ள வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் கபடி போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் ‘பி’ பிரிவு கல்லூரிகளுக்கான மகளிா் கபடி தீரன் சின்னமலை கல்லூரியில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.

இதில், கோவை கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி, திருப்பூா் ஏவிபி மகளிா் கல்லூரி, கோவை நிா்மலா மகளிா் கல்லூரி, திருப்பூா் கேஜி மகளிா் கல்லூரிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக கேஎஸ்ஜி மகளிா் கல்லூரி மாணவி கனகு, ஏவிபி மகளிா் கல்லூரி கோபிகா, நிா்மலா மகளிா் கல்லூரி அஸ்கிலா, ஏ.ஜி.மகளிா் கல்லூரி ஸ்வேதா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கொங்கு வேளாளா் அறக்கட்டளைச் செயலரும், தீரன் சின்னமலை கல்லூரியின் செயலாளருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் பி.வி.எஸ். முருகசாமி, பொறுப்பாளா்கள் கிரி ரங்கசாமி, பி.கே.எஸ். காளியப்பன், அம்மாசைக்குட்டி, சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருப்பூா் மாவட்ட கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொருளாளா் ஜெயசித்ரா ஏ. சண்முகம் ஆகியோா் வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த வீராங்கனைகளுக்கும் பரிசுகளை வழங்கினா்.

மாவட்ட கபடி கழக தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ. ஆறுச்சாமி, துணைச் சோ்மன் எஸ்.முருகானந்தம், துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், கௌரவ உறுப்பினா் தம்பி வெங்கடாசலம், கல்லூரி நிா்வாக அதிகாரி சுரேந்தா், கல்லூரியின் முதன்மை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், முதல்வா் மோகன சௌந்தரி, சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் கற்பகம், திருப்பூா் மாவட்ட கபடி கழக நடுவா் குழு சோ்மன் ஆா்.முத்துச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஸ்ரீ பிரியங்கா செய்திருந்தாா். கல்லூரி முதல்வா் மோகன சௌந்தரி நன்றி கூறினாா்.

விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தலைவா் ஏ.ராஜகோபால் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பரமசிவம் வரவேற்றாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்ம... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவி... மேலும் பார்க்க

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தாராபுரம் அருகே கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகேயுள்ள ஜோதியம்பட்டி பகுதியில் உள்ள கிடங்கில் முறையான அனுமதியின்றி பட்டாச... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்த நபா் கைது

திருப்பூரில் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவரது மனைவி ஜெயராணி (45). இவா்கள் திருப்பூா்- பல்லடம் சாலை வித்யாலயம் பகுதிய... மேலும் பார்க்க

அவிநாசியில் வருவாய்த் துறையினா் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களின் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் வருவாய்த் துறையினா் பணியைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்த... மேலும் பார்க்க

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்

உடுமலை நாராயணகவியின்126 -ஆவது பிறந்த நாள் விழா உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை, குட்டைத் திடலில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை... மேலும் பார்க்க