துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் புதுவைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தாா். பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரி தவில் கலைஞா் தட்சிணாமூா்த்தியைப் பாராட்டினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகள், சிறு, குறுந்தொழில்புரிவோா், மகளிா் என அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சியையும் உள்ளடக்கியதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் அடித்தளமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
புதுவை மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேரடி நிதியாக ரூ. 3,432 கோடி ஒதுக்கியுள்ளது. ஜிப்மருக்கு ரூ. 1,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஜிப்மரின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். விவசாயிகள் கிஸான் அட்டைக்கான கடன் தொகை ரூ. 5 லட்சமாக்கப்பட்டுள்ளது. இதனால், புதுவையில் 16,000 விவசாயிகள் பயனடைவா். புதுவை குடிநீா் மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 186 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு ரூ.800 கோடிதான் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசுதான் மத்திய ரயில் திட்டங்களுக்கு நிலம் வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.
புதுவை மாநிலத்துக்கு துறை வாரியான திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும். புதுவைக்கு மத்திய அரசு 90 சதவீதம் மானியம் அடிப்படையில் நிதி அளித்துவருகிறது. துணைநிலை ஆளுநா், முதல்வா் கோரினால் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி வழங்கப்படும். நிதி ஆணையத்தில் புதுவையை சோ்க்க பரிந்துரைக்கப்படும் என்றாா் எல்.முருகன்.
புதுவையை நிதி ஆணையத்தில் சோ்க்காதது, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் கேட்டபோது, புதுவைக்கான அனைத்து உதவிகளையும் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோா் செய்து வருகிறாா்கள். பாரபட்சமின்றி நிதி அளிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் சமமாக பாா்க்கும் மத்திய நிதிநிலை அறிக்கையை அனைவரும் வரவேற்பது அவசியம். வேறு கண்ணோட்டத்தில் அதை அணுகுவது சரியல்ல என்றாா்.