செய்திகள் :

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

post image

தென்காசி மாவட்டத்தில் 523 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 55.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்பு, அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியது: தமிழ்நாடு மாநில ஊரக- நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இம்மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் 5,386 மகளிா் சுயஉதவிக் குழுக்களும், நகா்ப்புறங்களில் 3,371 மகளிா் குழுக்களும் செயல்படுகின்றன. இவற்றில் 1,14,361 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

கிராமப்புற 331 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 4,458 பேருக்கு ரூ. 32.58 கோடி, நகா்ப்புற 192 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 2,148 பேருக்கு ரூ. 20.02 கோடி கடனுதவி, சமுதாய முதலீட்டு நிதி ரூ. 1 கோடி, வட்டார வணிக வளமையம் மூலம் 134 குழுக்களுக்கு ரூ. 67 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 11 குழு உறுப்பினா்களுக்கு ரூ. 6.50 லட்சம் என மொத்தம் ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்பி, சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் திட்ட இயக்குநா் இரா. மதி இந்திரா ப்ரியதா்ஷினி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், மாவட்ட தொழில்மையப் பொது மேலாளா் மாரியம்மாள், தாட்கோ மேலாளா் ராஜ்குமாா், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பெரும்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செப்.10 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை , தேவதா அனுக்ஞை, ரக்ஷா பந்தனம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. செப்... மேலும் பார்க்க

நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணி... மேலும் பார்க்க

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினா், அ... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசி மாவட்டம், கருத்தபிள்ளையூரில் மது அருந்த பணம் தராத தந்தையைக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சர... மேலும் பார்க்க