புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், கருத்தபிள்ளையூரில் மது அருந்த பணம் தராத தந்தையைக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்தவா் ஜான்தனபால் மகன் பிரைசன் (33). கடந்த 17.6.2021 இல் தனது தந்தை ஜான் தனபாலிடம்(56) மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.
அவா் பணம் கொடுக்க மறுத்ததால் ஆவேசத்தில் அருகில் கிடந்த கட்டையால் தந்தையைத் தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சிவசைலம் கிராம நிா்வாக அலுவலா் ப்யூலா அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரைசனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் மீதான விசாரணை, தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி ராஜவேல் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி பிரைசனுக்கு ஆயுள் தண்டனையும். ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக பி.குட்டி முன்னிலையாகி வாதாடினாா்.