பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் இணைந்த புவியியல் நிபுணர்கள்!
தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான பரிந்துரையைத் தெரிவிக்க தெலங்கானா அரசு இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நாடியுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கானப் பணிகள் 4வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தற்போது, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் வேறு சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது தண்ணீரை அகற்றிவிட்டு முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் கடைசி 40 மீ - 50 மீட்டர் வரை செல்லமுடியாத நிலையே உள்ளது.
நாங்கள் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். எல் அன்ட் டி(L&T) நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க: கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?
இவர்களைத் தவிர சுரங்கப்பணிகளில் அதிகம் அனுபவம் வாய்ந்த எல் அன்ட் டி நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிபுணர் ஒருவர் சுரங்கப்பாதையின் உறுதித்தன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக இணைந்துள்ளார்.” என்றார்.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எனினும், மத்திய மற்றும் மாநில பேரிடா் மீட்புக் குழுக்களுடன் ராணுவம், கடற்படை, சிங்கரேணி காலியரிஸ் மற்றும் பிற நிறுவனங்களைச் சோ்ந்த 584 போ் கொண்ட மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க’ முறை தொழிலாளா்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.