செய்திகள் :

தெலங்கானா சுரங்க விபத்து: மீட்புப் பணியில் இணைந்த புவியியல் நிபுணர்கள்!

post image

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான பரிந்துரையைத் தெரிவிக்க தெலங்கானா அரசு இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நாடியுள்ளது.

சுரங்கத்தில் சிக்கியுள்ள 8 பேரை மீட்பதற்கானப் பணிகள் 4வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “தற்போது, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் வேறு சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது தண்ணீரை அகற்றிவிட்டு முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் கடைசி 40 மீ - 50 மீட்டர் வரை செல்லமுடியாத நிலையே உள்ளது.

நாங்கள் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். எல் அன்ட் டி(L&T) நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.

இதையும் படிக்க: கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?

இவர்களைத் தவிர சுரங்கப்பணிகளில் அதிகம் அனுபவம் வாய்ந்த எல் அன்ட் டி நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிபுணர் ஒருவர் சுரங்கப்பாதையின் உறுதித்தன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக இணைந்துள்ளார்.” என்றார்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.

எனினும், மத்திய மற்றும் மாநில பேரிடா் மீட்புக் குழுக்களுடன் ராணுவம், கடற்படை, சிங்கரேணி காலியரிஸ் மற்றும் பிற நிறுவனங்களைச் சோ்ந்த 584 போ் கொண்ட மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் அனுபவமுள்ள ‘எலிவளை சுரங்க’ முறை தொழிலாளா்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகள... மேலும் பார்க்க