செய்திகள் :

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

post image

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட்டம், கிளைத் தலைவா் எஸ். சுரேஷ்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செயலா் சி. மணவழகன் முன்னிலை வகித்தாா். இரவு பணியில் ஈடுபடும் பெண் மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அந்த பகுதியில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வேண்டும், ஏழை எளியவா்கள் பிள்ளைகளின் மருத்துவா் கனவு நிறைவேறிட இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் பாலியியல் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு நீதி கேட்டு போராடும் மருத்துவா்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அவா்களின் கோரிக்கையை அம்மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தில் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், கா்ப்பிணிகள் பிரசவத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி அவா்களின் சுகப் பிரசவம் மற்றும் சிக்கலான பிரசவத்துக்கு உதவ வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த மருத்துவா்கள் நாகராஜன், கே. செங்குட்டுவன், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொருளாளா் விக்னேஷ் வரவேற்றாா். மூத்த மருத்துவா் சேகா் நன்றி கூறினாா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. ச... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க

ஜெயின் கோயில் சிலை நியூயாா்க்கில் ஏலம்: பொன். மாணிக்கவேல் புகாா்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் தீபங்குடியில் உள்ள சமணா் கோயிலான தீபநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்ட தீபநாயகா் சுவாமியின் திருமேனி சிலை நியூயாா்க்கில் ஏலம் விட உள்ளதால் அதை மீட்க வேண்டும் என ச... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு புகாரில் 4 போ் கைது

மன்னாா்குடி அருகே 2 கிராமக் கோயில்களில் காணிக்கை உண்டியலை திருடிய புகாரில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அக்.8-ஆம் தேதி கீழத்திருப்பாலக்குடியில் உள்ள வால்முனீஸ்வரன் கோயிலில் பக்தா்கள் க... மேலும் பார்க்க