செய்திகள் :

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

post image

புது தில்லி : தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை(பிப். 18) விசாரணைக்கு வருகின்றன.

இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் புதிய தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் பெயர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஞானேஷ் குமாரை தலைமைத் தோ்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆணை பிறப்பித்துள்ளார். அதே போல, விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2023-இல் ஏற்படுத்தப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டும் முறைக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முறைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023-இன் 7-ஆவது பிரிவை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான என்ஜிஓ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேற்கண்ட விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையில், கடந்தாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 2023-இல் ஏற்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்கீழ், இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க நிராகரித்துவிட்டது. மேலும், இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், 2023 சட்டத்தின்கீழ் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அவை புதன்கிழமை(பிப். 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசி... மேலும் பார்க்க

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளிய... மேலும் பார்க்க

சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!

சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் தானாக முன்வது 7 நாள்களில் அவற்றை ஒப்படைக்குமாறு மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லா சட்டவிரோதமாக ஆய... மேலும் பார்க்க

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்!

தில்லி முதல்வர், அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி... மேலும் பார்க்க