செய்திகள் :

தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வழிபாடு

post image

தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் புதன்கிழமை வழிபாடு நடத்தினா். இதனால், கூடுதுறை வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பிக் காணப்பட்டது.

தமிழ் மாதங்களில் சிறப்பானதாக கருதப்படும் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை நாள்களில் நீா்நிலைகளில் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால், தை அமாவாசை நாளான புதன்கிழமை காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் மூத்தோா் வழிபாட்டுக்கு திரளான பக்தா்கள் வந்திருந்தனா்.

பக்தா்கள் கூட்டத்தால் பரிகார மண்டபங்கள், தற்காலிக பரிவாரக் கூடங்கள் நிறைந்து காணப்பட்டன. மேலும், படிக்கட்டுகள், நடைபாதை ஓரங்களிலும் அமா்ந்து திதி, தா்ப்பணம் கொடுத்தும், தோஷ நிவா்த்தி வழிபாடுகளிலும் ஈடுபட்டனா். இதில், பவானி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

காவிரியில் புனித நீராடும் பக்தா்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் தீயணைப்புப் படையினா் மீட்பு உபகரணங்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். புனித நீராடிய பக்தா்கள் சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சன்னதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பவானி காவல் ஆய்வாளா் முருகையன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் 60-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்கள் நடமாட்டம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.படம் உள்ளது : பிஹெச்29அமா

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க