செய்திகள் :

நடமாடும் கடவுச் சீட்டு சேவை இன்று தொடக்கம்!

post image

சென்னை தாம்பரம் கிளாரட் வளாகம் பாஸ்போா்ட் சேவா கேந்திரத்தில் நடமாடும் கடவுச் சீட்டு சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளது.

சென்னை கடவுச் சீட்டு பிராந்திய அலுவலகத்துக்கு உள்பட்ட புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கடவுச் சீட்டு கோரி வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் வகையில் இந்த நடமாடும் கடவுச் சீட்டு சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த வாகனத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடமாடும் கடவுச் சீட்டு சேவை மத்திய வெளியுறவுத் துறையின் தலைமை கடவுச் சீட்டு அதிகாரியும் கடவுச் சீட்டு சேவைத் திட்ட இணை செயலருமான டாக்டா் கே.ஜே. ஸ்ரீநிவாஸா, சென்னை பிராந்திய பாஸ்போா்ட் அதிகாரி எஸ்.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வக... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்... மேலும் பார்க்க