செய்திகள் :

நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல்; ஒரே பிளேடின் 3 துண்டுகள் - 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

post image

மும்பையில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், சைஃப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். திருட வந்த நபர் சைஃப் அலிகானின் முதுகு பகுதியில் பிளேடால் தாக்கியதில் கடும் காயம் ஏற்பட்டது. மும்பை பாந்திராவில் உள்ள சைஃப் அலிகான் வீட்டில் நடந்த இத்தாக்குதலில் சைஃப் அலிகானின் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். குற்றவாளியும் தப்பித்துவிட்டான். இத்தாக்குதல் குறித்து மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

மூன்று நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் நள்ளிரவில் புதருக்குள் மறைந்திருந்த ஷரிபுல் இஸ்லாம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். திருடும் நோக்கத்தில் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த ஷர்புலிடம் விசாரித்த போது அவர் வங்கதேசத்தை தேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேற்கு வங்கம் வழியாக ஆற்றை கடந்து இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து மும்பை வந்தது தெரிய வந்தது.

சைஃப் அலிகான்

தாக்குதல் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் போலீஸார் இவ்வழக்கில் மும்பை பாந்திரா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அக்குற்றப்பத்திரிகையில் சைஃப் அலிகான் உடம்பில் இருந்து அகற்றப்பட்ட பிளேட் துண்டு, ஷரிபுலிடமும், அவன் தூக்கி எறிந்த இடத்தில் இருந்தும் மீட்கப்பட்ட பிளேட் துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு சைஃப் அலிகான் வீட்டில் பதிவாகி இருந்த குற்றவாளியின் கைரேகை தொடர்பான தடயவியல் அறிக்கையும் குற்றபத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 பிளேட் துண்டுகளும் ஒரே பிளேடின் உடைந்த பகுதிகள் என்று பின்னர் தெரிய வந்தது.

ஷர்புல் இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தாக்குதலுக்கு பிறகு சைஃப் அலிகான் மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு ஜனவரி 21ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் அலிகானை நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ டிரைவரை அழைத்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன... மேலும் பார்க்க

வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ - உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும் பார்க்க

`பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' - அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்!

நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்படும் சமீபத்திய அவதானிப்புகள் பலவும் பெண்கள் மீது உணர்வில்லாத கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அதிருப்தி தெரிவித்த... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்க..!’ - அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்... மேலும் பார்க்க

`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!' - 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதி... மேலும் பார்க்க

TASMAC : `ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?’ - தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க