செய்திகள் :

நத்தம் அருகே சாலையில் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்த கார்

post image

நத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உள்பட இரண்டு பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார்.

காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் சக்திவேல் (21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார், மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக பள்ளபட்டி பிரிவு அருகே உள்ள மேம்பாலத்தில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது.

கார் மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு சாய்ந்தது.

இந்த விபத்தில் காரில் ஏர்பேக் இருந்ததால் நல்வாய்ப்பாக இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த இரண்டு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு சம்பவம்: மாணவனுக்கு 14 நாள் காவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை பேரவையில் அறிமுகம் செய்வதில் வா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நார... மேலும் பார்க்க

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக சிறிதளவில் குறைந்து வந்த தங்கத்தின்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.4 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

திபெத்: சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழ... மேலும் பார்க்க