செய்திகள் :

இறந்தவர்களைப் பாட வைக்க விருப்பமில்லை: ஹாரிஸ் ஜெயராஜ்

post image

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசியுள்ளார்.

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். இறுதியாக, ரவி மோகனின் பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதில், இடம்பெற்ற மக்காமிஷி பாடல் கவனம் பெற்றது.

தற்போது, குறைவான படங்களுக்கே இசையமைப்பதுடன் இசைக் கச்சேரிகளில் முழு கவனத்தைச் செலுத்து வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜிடம், “மறைந்த பாடகர்களான மலேசியா வாசுதேவன், பவதாரிணி உள்ளிட்டோரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஏன் அப்படி செய்வதில்லை?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ஹாரிஸ், “வாய்ப்புகாக பல பாடகர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது மறைந்தவர்களைப் பாட வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. எதற்கு ஏஐ-யைப் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவோ பாடகர்கள் இருக்கிறார்கள். வாய்ப்புகளை உயிருடன் இருப்பவர்களுக்கு வழங்கினால் அதில் ஒரு பயனாவது இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எஸ்.பி.பி, அஜித் குமார்... இளையராஜா செய்வது சரியா?

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களாக கனிகா, சாக்‌ஷி அகர்வால்!

நடிகைகளாக கவனம் பெற்ற கனிகா மற்றும் சாக்‌ஷி அகர்வால் ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். சின்ன திரை பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்குபெறும் நாங்க ரெடி நீங்க ரெடியா என்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை தர்ஷனா அசோகன் தான் கருவுற்று இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்திய... மேலும் பார்க்க

லியோனார்டோ டிகாப்ரியோவின் புதிய பட அப்டேட்!

பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ’ஒன் பேடல் ஆஃப்டர் அனதர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லெஜண்டரி இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான... மேலும் பார்க்க

சித்திரை தேர்த்திருவிழா: ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில... மேலும் பார்க்க

கிய்ராசி ஹாட்ரிக் கோல் வீண்: அரையிறுதிக்கு முன்னேறிய பார்சிலோனா!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி மொத்த கோல்கள் அடிப்படையில் டார்ட்மண்ட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் லீக்கில் டார்ட்மண்ட் உடனான முதல்கட்ட காலிறுதிப் போட்டியில் பா... மேலும் பார்க்க

பாங்காக் சென்ற இட்லி கடை படக்குழு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது. ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்பட... மேலும் பார்க்க