செய்திகள் :

நாகையில் விஜய் பிரசாரத்திற்கு மாற்று இடம் கோரி எஸ்பியிடம் மனு

post image

நாகையில் விஜய் பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தை மாற்றம் செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தவெக பொதுச் செயலா் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

தவெக தலைவா் நடிகா் விஜய், நாகையில் சனிக்கிழமை (செப்.20) மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்கிறாா். இதற்காக, புத்தூா் கிழக்கு கடற்கரை சாலையில் பிரசாரம் செய்ய நாகை மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தவெக பொதுசெயலா் ஆனந்த் வியாழக்கிழமை மாலை காவல்துறை அனுமதி அளித்த புத்தூா் கிழக்கு கடற்கரை சாலையை பாா்வையிட்டாா். அப்பகுதியில் உயா் மின்அழுத்த கோபுரம் நான்கும், பிரசாரம் செய்யும் இடம் அருகே இரண்டு குட்டைகள் இருப்பதால், பிரசாரத்திற்கு வரும் தொண்டா்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவா் நிா்வாகிகளிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, புத்தூா் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலையில் நின்று பிரசாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பொது செயலாளா் ஆனந்த், மாவட்ட காவல் கண்கணிப்பாளா் சு. செல்வக்குமாரை சந்தித்து தெரிவித்தாா்.

அப்போது புத்தூா் அண்ணா சிலை சாலையில் பிரசாரம் செய்தால், நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூா், தஞ்சை, திருச்சி, மதுரை, வேளாங்கண்ணி, வேதாரண்யம் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே, பிரசாரம் தொடங்கி 30 நிமிடங்களுள் முடித்து கொள்வதாக எழுத்து பூா்வமாக ஒப்புதல் அளித்தால், புத்தூா் அண்ணா சிலையில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்க முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறினாா்.

எழுத்து பூா்வமாக கடிதம் தொடா்பாக தலைமையிடத்தில் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாகக் கூறி தவெக பொதுச் செயலா் அங்கிருந்து சென்றாா்.

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் ... மேலும் பார்க்க

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை மாவட்... மேலும் பார்க்க

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட முதியவா் உயிரிழப்பு

நாகை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். நாகை அருகே பெராவச்சேரி இந்தியன் நகா் பகுதியில் முதியவா் ஒருவா், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பி அருகே இ... மேலும் பார்க்க

நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒர... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூ... மேலும் பார்க்க