செய்திகள் :

நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறியே ஜஸ்டின் ட்ரூடோ!

post image

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறியே சம்பவம் இணையத்தில் வைராலாகி வருகிறது.

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் 7 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி மார்ச் 10ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்தெடுக்கும் முயற்சியில் கனடா வங்கியின் ஆளுநரான மார்க் கார்னி புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சில நாள்களில் அவர் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இதையும் படிக்க: கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்?

இந்தநிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியைச் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். தமது பதவிக்காலம் முடிவடைவதால் நாடாளுமன்றத்தைவிட்டு ட்ரூடோ வெளியேறினார். ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரூடோ கடந்த பத்தாண்டுகளில் லிபரல் கட்சியின் சாதனைகளையும் எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் லிபரல் கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இது முடிந்ததும் ஒட்டாவாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ நாக்கை நீட்டிக்கொண்டு தனது நாற்காலியையும் தூக்கிக்கொண்டு வெளியேறினார்.

ஜஸ்டின் ட்ரூடோ கையில் நாற்காலியுடன் நாக்கை காட்டிக்கொண்டு வெளியேறிய நிகழ்வு குறித்து என்ன சர்க்கஸ் இது? என்றும் அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி விட்டதாகவும் இணையதளவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!

30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!

ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ம... மேலும் பார்க்க

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அவருடன் அவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

ரயில் சிறைபிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!

ரயில் சிறைபிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரயிலில் இருந்த 104 பயணிகள் பத்திரமாக பாதுகாப்பு பணியாளர்களால் மீட்கப்பட்டனர். பாகிஸ்தானில் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு 9 பெட... மேலும் பார்க்க

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

வாஷிங்டன் / டொரன்டோ: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டோரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமி... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபா் டுடோ்த்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 போ் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். இது குறித்து அவசரக்கால மீட்புக் குழுவினா் கூறியதாவது: தலைநகா் ஜோஹன்னஸ்பா்கின் சா்வதேச விமான நிலையம் அருகே நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க