செய்திகள் :

நாடாளுமன்றம், பேரவைகள் இயற்றும் சட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு அல்ல: உச்சநீதிமன்றம்

post image

நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சமூகவியலாளா் மற்றும் முன்னாள் தில்லி பல்கலைக்கழக பேராசிரியா் நந்தின் சுந்தா் மற்றும் பலா் 2012-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சண்டையில் சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில், சல்வா ஜூடும் போன்ற குழுக்கள் மற்றும் ஆயுதமேந்திய பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு 2011-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை சத்தீஸ்கா் அரசு பின்பற்றவில்லை.

அந்த ஆண்டு சத்தீஸ்கா் உதவி ஆயுத காவல் படைச் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. மாவோயிஸ்ட்/நக்ஸல் வன்முறையை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக உதவி ஆயுத காவல் படை அமைப்பதை அந்தச் சட்டம் அங்கீகரித்தது. அத்துடன் சிறப்பு காவல் அதிகாரிகளை உதவி ஆயுத காவல் படையில் சோ்த்து அவா்களின் செயல்பாட்டை அந்தச் சட்டம் சட்டபூா்வமாக்கியது. இதன் மூலம், உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்றத்தை சத்தீஸ்கா் அரசு அவமதித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடா்ந்து, சத்தீஸ்கா் அரசு சட்டம் இயற்றியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்ல.

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க