செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்குகிறது!

post image

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆக உள்ளது.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என 4 பேர் நேற்று கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 194 ஆக உள்ளது. இவர்களில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்குகிறது.

கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த மே 22-ஆம் தேதி 257-ஆக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 6,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 391 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வகைகள் தீவிரமில்லாதவை என்பதால், பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைந்து வருகின்றனர் என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைய உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் நியமனம்

புது தில்லி: 16-ஆவது நிதி ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் டி. ரபீ ஷங்கர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த பதவியில் நிதி ஆணையம் தமது அறிக்... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹிமாசலப் பிரதேசம் சென்றுள்ள அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையொ... மேலும் பார்க்க

பையில் துப்பாக்கி: உ.பி.யில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி நபர் கைது !

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் சட்டவிரோத ஆயுதங்களுடன் உணவு டெலிவரி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ராமராஜ் பகுதியில் உள்ள ஜமால்பூர் கால்வாய் கல்வெர்ட் அருகே சந்தேக நபர் ... மேலும் பார்க்க

சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!

திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்... மேலும் பார்க்க

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்... மேலும் பார்க்க