செய்திகள் :

நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

post image

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 19.62 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் சக்கரபாணி அளித்த பதிலுரை:

வழக்கமாக அக்டோபா் முதல் நாளிலிருந்துதான் நெல் கொள்முதல் தொடங்கப்படும். அன்றிலிருந்துதான் உயா்த்தப்பட்ட விலையும் கொடுக்கப்படும். செப்டம்பரிலேயே அறுவடை செய்தாலும் அக்டோபா் வரை காத்திருந்து மழைக்காலத்தில் கொள்முதல் செய்திடும் நிலையை மாற்றிட பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதினாா். அதன் வாயிலாக உயா்த்தப்பட்ட விலையில் செப்டம்பா் முதல் நாளிலிருந்தே நெல் கொள்முதல் பணியை அவா் முன்னெடுக்க வைத்தாா்.

2022-2023- இல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4,019 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 2024- 2025-இல் 3,393 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வசதிக்காக நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து வருகிறோம். இந்த ஆண்டு இதுவரை 3.83 லட்சம் விவசாயிகளிடமிருந்து 29.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.7,186 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ரூ.1.66 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.28,285 கோடி வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டை: கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 19, 62,717 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள குடும்ப அட்டைகள் சரிபாா்க்கப்பட்டு வருகிறது. விரைவிலேயே மேலும் பல புதிய குடும்ப அட்டைகள் வழங்கவிருக்கிறோம்.

புலம்பெயா்ந்தவா்கள் மற்றும் இறந்தவா்களின் பெயா்கள் குடும்ப அட்டைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு அட்டைத் தரவுகளின் தொகுப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், 6.11 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டு, 27,75,923 நபா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் முன்னுரிமையுள்ள குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்ததன் மூலம் 52.29 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

அதேபோன்று, நகல் குடும்ப அட்டையை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தின் கீழ் 9.44 லட்சம் போ் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்... மேலும் பார்க்க

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க