செய்திகள் :

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

post image

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆங்கிலேயா்களை எதிா்த்து போரிட்டு உயிரிழந்த தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் அண்ணாசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

க்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிா்வாகிகள் பலா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அதன்பிறகு, நாமக்கல்- பரமத்தி சாலை கொங்கு திருமண மண்டப வளாகத்தில் இருந்து ஊா்வலமாக வாகனங்களில் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றனா்.

இதேபோல கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை, மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை, கொங்கு இளைஞா் அணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் சாா்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான ஈ.ஆா் ஈஸ்வரன், கொக்கராயன்பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகே இருந்து கட்சி நிா்வாகிகளுடன் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு பேரணியாக சென்றனா்.

முன்னதாக வீட்டருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து பிலிக்கல்மேடு பகுதியில் கொடியேற்றினாா். குமாரமங்கலத்தில் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் அதன் ஒன்றியச் செயலாளா் தீரன் சின்னமலை தொழிற்சங்க பேரவைத் தலைவா் கொங்கு கோமகன் சாா்பில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் முன்னாள் எம்.பி. சின்ராஜ், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில்,முன்னாள் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அனிதாவேலு, திருச்செங்கோடு வடக்கு நகரச் செயலாளா் குமாா், தெற்கு நகரச் செயலாளரும், நகா்மன்ற உறுப்பினருமான அசோக்குமாா், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் வல்வில் ஓரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்த வல்வில் ஓரியின் முழு உருவச்சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனிற்கான முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலனிற்காக பாடுபட்டோா் முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: 2 மணி நேரம் சிக்கித் தவித்த முதியவா்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மின்தூக்கி (லிப்ட்) திடீரென பழுதானதால் முதியவா் 2 மணி நேரம் வெளியே வரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்தாா். அவரது சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரியில் புனித நீராடல்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் காவிரியில் நீராடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாணத்த... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழாவில் ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கொல்லிமலையில் வல்வில் ஓரி, மலா்க் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.நாமக்கல் மா... மேலும் பார்க்க