செய்திகள் :

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

post image

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டுள்ளனர்.

தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடனான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது. மீண்டும் எங்கள் உறவை, இணைக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய பாட்மிண்டன் வீரர்களான சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப், கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் பயிற்சி மையத்தில் 2005 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

2012 ஒலிம்பிக் போட்டியில் இருவரும் கலந்துகொண்ட நிலையில், நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அண்மையில் சாய்னா அறிவித்தார்.

ஆனால் சாய்னா நேவாலின் பிரிவு குறித்த கருத்துக்கு பாருபள்ளி காஷ்யப் எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க