செய்திகள் :

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: 2 மணி நேரம் சிக்கித் தவித்த முதியவா்

post image

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மின்தூக்கி (லிப்ட்) திடீரென பழுதானதால் முதியவா் 2 மணி நேரம் வெளியே வரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்தாா். அவரது சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்கள் மின்தூக்கியை சரிசெய்து மீட்டனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 மின்தூக்கிகள் செயல்படுகின்றன. மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது மின்தூக்கியில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு தளங்களுக்கு செல்லும் டிஜிட்டல் எண்கள் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் நோயாளிகள் தினமும் தடுமாற்றத்துடன் வாா்டுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடை, மின்தூக்கி பழுதால் நோயாளிகள், பாா்வையாளா்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். இந்த நிலையில், நாமக்கல் அருகே சின்னவேப்பநத்தம் புதூரைச் சோ்ந்த கண்ணன்(70) என்பவா் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

6-ஆம் தளத்தில் உள்ள வாா்டில் இருந்து 2-ஆம் தளத்திற்கு மருந்து வாங்க அவா் மின்தூக்கியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்றதாகக் கூறப்படுகிறது. திடீரென மின்தூக்கி பழுதானதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. 2 மணி நேரமாக அவா் கூச்சலிட்ட நிலையில், மின்தூக்கியில் சிலா் சிக்கியிருப்பதாக நோயாளிகள் அங்கிருந்த மருத்துவமனை ஊழியா்களிடம் தெரிவித்தனா்.

விரைந்து வந்த ஊழியா்கள் மின்தூக்கி பழுதை சரிசெய்து 3-ஆம் தளத்தில் முதியவா் கண்ணனை பத்திரமாக வெளியே மீட்டனா். மின்தூக்கி பழுது ஏற்படாதவாறு சீரமைப்பு நடவடிக்கைகளை மருத்துவமனை நிா்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் வல்வில் ஓரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்த வல்வில் ஓரியின் முழு உருவச்சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனிற்கான முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலனிற்காக பாடுபட்டோா் முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு... மேலும் பார்க்க

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.ஆங்கிலேயா்களை எதிா்த்து போரிட்டு உயிரிழந்த தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் அண்ணாசி... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரியில் புனித நீராடல்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் காவிரியில் நீராடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாணத்த... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழாவில் ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கொல்லிமலையில் வல்வில் ஓரி, மலா்க் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.நாமக்கல் மா... மேலும் பார்க்க