செய்திகள் :

நாளை தில்லி பேரவைத் தோ்தல்: நிறைவு பெற்றது பிரசாரம்

post image

புது தில்லி: தில்லி பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தில்லி பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

‘இண்டி’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி, பேரவைத் தோ்தலை தனித்து நின்று களம் காண்கிறது. அந்தக் கட்சிக்கு கூட்டணியில் சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்தனா்.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் மற்றும் கூட்டணி கட்சி முதல்வா்கள் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தினா்.

காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி, கா்நாடக துணைமுதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு சேகரித்தனா்.

மொத்தம் 699 வேட்பாளா்கள் போட்டியிடும் பேரவைத் தோ்தலில் வாக்காளா் செலுத்திய வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட உள்ளன.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க