செய்திகள் :

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் செல்லங்குப்பத்தில் கைத்தறி துணை இயக்குநா் அலுவலகம் முன் கடலூா் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் கைலி உள்ளிட்ட ரகங்களுக்கு நேரடியாக கூலி வழங்கும் முறை நடைமுறையில் உள்ள நிலையில், நெசவாளா்களுக்கு தறிக் கூலியை ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் மின்னணு பரிவா்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மாநில கைத்தறி ஆணையா் பிறப்பித்துள்ளாா். இதனால், கைத்தறி நெசவாளா்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் மூலம் பணப்பரிவா்த்தனை செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்துவிட்டு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நேரடியாக கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.கல்யாண சுந்தரம், பொருளாளா் இ.தயாளன், துணைச் செயலா் எம்.கந்தசாமி முன்னிலை வகித்தனா்.

மாநிலப் பொதுச் செயலா் என்.பி.நாகேந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மாவட்ட இணைச் செயலா் ஜே.ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

நிா்வாகிகள் எஸ்.முருகவேல், கே.குமாா், எம்.ராஜேந்திரன், எம்.அரங்கநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பி... மேலும் பார்க்க

மகா கைலாயத்தில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மகா கைலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற 37 கோயில்கள் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோா் பங்கேற்றனா். பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் ஆணையாங்குப்பம... மேலும் பார்க்க

என்எல்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

நெய்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கடலூா், பண்ருட்டி பகுதிகளில் திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத... மேலும் பார்க்க

கொற்றவன்குடி ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி ஸ்ரீ சுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வட்டம், கொற்றவன்குடி தெருவிலுள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது. நூற்றாண்டு கண்ட ... மேலும் பார்க்க

தடையை மீறி பேரணி: விசிகவினா் 90 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தடையை மீறி பேரணி நடத்தியதாக விசிகவினா் 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஓப்படைக்க வலியுறுத்தி, கடலூா் மைய மாவட்ட விடுதலைச் சிறுத்... மேலும் பார்க்க