செய்திகள் :

நியாய விலைக் கடைகளில் ஒரே நாளில் அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்: உணவுத் துறை அமைச்சா் உறுதி

post image

நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் ஒரே நாளில் கிடைக்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதியளித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் என்.அசோக்குமாா் (பேராவூரணி ) எழுப்பினாா். இதற்கு அமைச்சா் அர.சக்கரபாணி அளித்த பதில்:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள நியாய விலைக் கடைகளில் 34,793 கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2,535 பகுதிநேர கடைகளுக்கு தனி குறியீடு, விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைகள் பிரிப்பு: நகரப் பகுதிகளில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மிகாமலும், 800 அட்டைகளுக்குக் குறையாலும், ஊரகப் பகுதிகளில் 800 அட்டைகளுக்கு மிகாமலும், 500-க்கு குறையாமலும் இருந்தால் தனிக் கடைகள் பிரித்து வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சா்க்கரை ஆகியன எந்தத் தடையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்துக்குத் தேவையான பொருள்களில் 60 சதவீதமானவை, முந்தைய மாதத்தின் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டு விடுகின்றன. மாதத்தின் முதல் தேதியிலிருந்து பொருள்களை எந்த நேரத்திலும் வாங்கிக் கொள்ளலாம். எந்தக் கடையிலாவது பொருள்கள் ஒரே நேரத்தில் கிடைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் சக்கரபாணி உறுதியளித்தாா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க