செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க அரசு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டத்தில், நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான மாவட்ட அளவிலான பணிக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசியது: திருத்தப்பட்ட நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகளை செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வீடுகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரித்தலை உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் தகுதிவாய்ந்த உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரச் சான்று பெற வேண்டும். ஒருமுறைப் பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்த்து அதற்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்துதல் மற்றும் ‘மீண்டும் மஞ்சப்பை‘ பயன்பாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் மாபெரும் நெகிழி சேகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். பண்டிகைக் காலம் மிக விரைவில் தொடங்க இருப்பதால், சந்தைகளில் மெல்லிய நெகிழி பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடா் சோதனைகள் மேற்கொண்டு அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் க.ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் .

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்த தனி நபரை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

அரியலூரில் செப்.27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் செப்.27-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகள் திருடிய வழக்கில் இருவா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 36 பவுன் நகைகளை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மீன்சுருட்டியை அடுத்துள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டியில் சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைக்கப்பட்டது. சென்... மேலும் பார்க்க

அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவி... மேலும் பார்க்க

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொ... மேலும் பார்க்க