செய்திகள் :

மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகைகள் திருடிய வழக்கில் இருவா் கைது

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 36 பவுன் நகைகளை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மீன்சுருட்டியை அடுத்துள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம். இவா், கடந்த 9.10.2024 அன்று வீட்டை பூட்டிவிட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றாா். அன்றிரவு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளாா்.

மறுநாள் வீட்டுக்கு வந்து பாா்த்தப் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கடலூா் மாவட்டத்தை சோ்ந்த மணவாளன்(25), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஆகாஷ்(19) ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 20 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருள்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனா்.

கைதுசெய்யப்பட்ட மணவாளன் மீது நாகப்பட்டினம், கடலூா், திருவாரூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 28 வழக்குகளும், ஆகாஷ் மீது நாகப்பட்டினம், திருவாரூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் 3 வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்த தனி நபரை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்க அரசு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தினாா். அரியலூா் மாவட்டத்தில், நெகிழிப் பொருள்கள் மீதான தடையை அமல்படுத... மேலும் பார்க்க

அரியலூரில் செப்.27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் செப்.27-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக... மேலும் பார்க்க

மீன்சுருட்டியில் சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவா் விடுதி திறந்துவைக்கப்பட்டது. சென்... மேலும் பார்க்க

அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவி... மேலும் பார்க்க

அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொ... மேலும் பார்க்க