நெல்லை மாவட்டத்தில் மீனவா்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதையடுத்து, மறு அறிவிப்பு வரும்வரை திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்திருந்தாா். அதன்படி, 10 மீனவ கிராமங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், 2ஆவது நாளான சனிக்கிழமையும் அவா்கள் கடலுக்கு செல்லவில்லை.
அடிக்கடி இயற்கைச் சீற்றத்தால் மீன்பிடித் தொழிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, உவரி முன்னாள் ஊராட்சித் தலைவா் அந்தோணி தெரிவித்துள்ளாா்.