செய்திகள் :

நேபாள சிறையில் மோதல்: மூவர் பலி, 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!

post image

நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு சிறைகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.

நேபாளம் முழுவதும் ஜெனரல் இசட் குழு தலையிலான அரசு எதிர்ப்பு ஆரப்பாட்டங்களின் ஒரு பகுதியாக வன்முறை வெடித்ததிலிருந்து பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் இறந்த கைதிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தொடரும் வன்முறைப் போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக நேபாள ராணுவம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

வியாழக்கிழமை (செப். 11)ல் காலை நிலவரப்படி மாதேஷ் மாகாணத்தில் உள்ள ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள சிறையில் கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கைதிகள் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி வெடிப்பை ஏற்படுத்தி சிறையிலிருந்து வெளியேற முயன்றபோது மோதல் ஏற்பட்டது. கைதிகளில் மூவர் பலியான நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்கள் ராமேச்சாப் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செப். 8 வன்முறை வெடித்ததிலிருந்து நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மோதல்கள் மற்றும் தப்பிச் செல்லும் சம்பவங்களும், தீ விபத்துகள், கலவரங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடும் சம்பவம் நடைபெற்று வருவதாக ஊடக அறிக்கை தெரிவித்தது.

At least three inmates died during clashes with security personnel in a Nepal jail on Thursday while more than 15,000 prisoners escaped from more than two dozen prisons across the country since the violent anti-government protests erupted in the Himalayan nation.

அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவின் திரு... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை: கொலையாளி யார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்தில், சந... மேலும் பார்க்க

டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் என்று அறியப்படும் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 31.சில மாதங்களுக்கு முன்பு, கிர்க்கின் மனைவி எரி... மேலும் பார்க்க

தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?

காஸா நகரத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. காஸாவில் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட ... மேலும் பார்க்க

நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்!

நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இதில், ஒரு அமைச்சர் மற்று... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக்கொலை! பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பயங்கரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பி ஆதரவாளரான சார்லி கிர்க் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால... மேலும் பார்க்க