செய்திகள் :

நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!

post image

சென்னை: மிக வித்தியாசமான சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாடு சந்திக்கும். இந்த தேர்தலில் போட்டியே திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் என்று தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுவில் கட்சித் தலைவர் விஜய் கூறினார்.

திருவான்மியூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுவில் தலைவர் விஜய் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அப்படியெனில் ஏன் எந்தக் கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனக்கும் என் கட்சிக்கும் கொடுக்கிறீர்கள்?

அணை போட்டு ஆற்றைத் தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது, தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும் என்று கூறினார்.

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது அவர்களே, செயலிலும் ஆட்சியிலும் அதனைக் காட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரையும், தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதுவரை பெயரைக் குறிப்பிடாமல் அரசுகளை தாக்கிப் பேசி வந்த விஜய் முதல் முறையாகப் பேரைக் குறிப்பிட்டதோடு, பெயரைச் சொல்ல என்ன பயமா என்றும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய விஜய், மக்கள் சக்தியின் உதவியோடு மக்கள் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம். காற்றையும் மழையையும் யாரால் கட்டுப்படுத்த முடியும். அதுபோலத்தான், தமிழகத்தில் அமையவிருக்கும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியையும். யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

தமிழகத்தில் தவெக அமைக்கவிருக்கும் ஆட்சி, அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சியாக இருக்கும். ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். சட்டம்- ஒழுங்கு முறையாக கண்டிப்புடன் இருக்கும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம், அனைத்தும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதே நமது இலக்கு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்து தொழிலாளர்கள் பக்கமும் நாம் கண்டிப்பாக நிற்போம். ஏனெனில் நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான்.

தமிழகம் என்பது விவசாய பூமி, விவசாயத்துக்கு எதிராக எந்த திட்டத்தையும் கொண்டு வர வேண்டாம். அதை நாங்கள் எதிர்ப்போம். தமிழகத்தை நாங்கள் எல்லா வகையிலும் பாதுகாப்போம். அது எங்கள் கடமை என்று விஜய் கூறியுள்ளார்.

தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.67,000-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.67,000-ஐ தாண்டி விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருந... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், கு... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க