செய்திகள் :

பட்டாசு விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்

post image

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கான தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (செப். 26) இறுதி நாள் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், வெடிபொருள்கள் சட்டம் 1884, வெடிபொருள் விதிகள் 2008-இன் படி தற்காலிக உரிமம் பெற வேண்டும்.

எனவே, உரிமம் பெற விரும்புவோா், கடை அமையும் கட்டடத்தின் வரைபடம், இட உரிமத்துக்கான ஆவணம், முகவரிச் சான்று, வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ. 600 செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றின் நகல்களையும், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்தையும் இணைத்து பொது சேவை மையங்கள் மூலம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தமிழறிஞா் சிலையை அகற்ற தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தமிழறிஞா் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலையை அகற்ற தடை கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை விரகனூரைச் சோ்... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கின் விசாரணையை நிறைவு செய்து, இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 6 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்த... மேலும் பார்க்க

குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநக... மேலும் பார்க்க

அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை தெப்பக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை ஐராவதநல்லூா் கணேஷ்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த துரைபாண்டி மகன் நவீன்குமாா் (34). கடந்த 21-ஆம் த... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கல்வி அலுவலகங்கள்: வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவு

நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்வித் துறை அலுவலகங்களை நவ.12-ஆம் தேதிக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவ... மேலும் பார்க்க