செய்திகள் :

பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு: கார்கே கண்டனம்!

post image

பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு திட்டமிட்டு குறைத்து வருவதாகவும், இதனால் இளைஞர்களின் கல்வி வாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பாஜக அரசு குறைத்துள்ளது வெட்கக்கேடானது. அரசு புள்ளிவிவரங்களின்படி அனைத்து உதவித்தொகைகளிலும் ஆண்டுதோறும் சராசரியாக 25 சதவீதம் குறைவான நிதியை மட்டுமே செலவிட்டுள்ளது

பின்தங்கிய மாணவர்களுக்குச் சரியான ஆதரவு வழங்கப்படாவிட்டால், நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை எவ்வாறு உறுதி செய்யும்? நாட்டின் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், அவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால், நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, ராகுல் காந்தி பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார், இரண்டும் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்று கூறினார்.

இந்தியாவில் சித்தாந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஒருபுறம், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை நம்புகிறது, அதற்காகப் போராடுகிறது. மறுபுறம், இந்திய அரசியலமைப்பை, பி.ஆர். அம்பேத்கர், மகாத்மா காந்தியின் அரசியலமைப்பை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக அதைப் பலவீனப்படுத்தி, அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றன.

இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்தியாவைப் பற்றிய சிந்தனையாகும். இந்த அரசியலமைப்பில் இந்தியாவின் சிறந்த ஆளுமைகளின் குரலும் சிந்தனையும் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகள... மேலும் பார்க்க