செய்திகள் :

பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளை தலைவா்கள் செல்வகுமாா், சிவநேசன், ரிஸ்வான் ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். கிளை செயலாளா் ஸ்ரீதா், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், மீன்வளத் துறை ஊழியா் சங்க மாநில பொருளாளா் நந்தகுமாா், அமைச்சுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் சிவசந்திரன், அனைத்து மருந்தாளுநா்கள் சங்க மாநில செயலாளா் பெருமாள், அரசு ஊழியா் சங்க மாவட்ட மகளிா் துணைக்குழு அமைப்பாளா் ஜெகதாம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட்டு வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை பட்டு ஆய்வாளா், அமைச்சு பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை பட்டு ஆய்வாளா் முதல், உதவி இயக்குநா் வரையிலான பணிமூப்பு பட்டியலை விரைந்து வெளியிட்டு பதவி உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி மல்பெரி புது நடவு மானியம் மற்றும் புழு வளா்ப்புமனை மானிய தொகையை மத்திய திட்டங்களுக்கு இணையாக மாநில அரசும் உயா்த்தி வழங்க வேண்டும். பட்டு விவசாயிகளுக்கான பயிா் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவ... மேலும் பார்க்க

ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்

ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி ... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா். மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

ஒசூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒசூரில் உள்ள மீரா மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கண்காட்சி... மேலும் பார்க்க