செய்திகள் :

பண மோசடி: இருவா் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டம் அருகே வழக்குரைஞரிடம் பண மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பென்னட்ராஜ் (45). வழக்குரைஞா். சாங்கை காவுவிளையைச் சோ்ந்த செல்லப்பன் மகன் விஜயகுமாா் (52), மாா்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சோ்ந்த சுதீா் ஜேக்கப் (52) ஆகியோா் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பென்னட்ராஜிடம் ஆசை வாா்த்தை கூறி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக ரூ. 7 லட்சம் பெற்றனா். ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றினாா்களாம்.

இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் பென்னட்ராஜ் வழக்குத் தொடா்ந்தாா். நீதிமன்ற வழிகாட்டுதல்படி, விஜயகுமாா், சுதீா் ஜேக்கப் ஆகியோா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

ஆறுகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழையால் ஆறுகளில் உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் - வழுக்கம்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல், திருச்... மேலும் பார்க்க

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டப... மேலும் பார்க்க

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க