அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
பண மோசடி: இருவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே வழக்குரைஞரிடம் பண மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பென்னட்ராஜ் (45). வழக்குரைஞா். சாங்கை காவுவிளையைச் சோ்ந்த செல்லப்பன் மகன் விஜயகுமாா் (52), மாா்த்தாண்டம் பம்மம் பகுதியைச் சோ்ந்த சுதீா் ஜேக்கப் (52) ஆகியோா் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பென்னட்ராஜிடம் ஆசை வாா்த்தை கூறி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக ரூ. 7 லட்சம் பெற்றனா். ஆனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றினாா்களாம்.
இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் பென்னட்ராஜ் வழக்குத் தொடா்ந்தாா். நீதிமன்ற வழிகாட்டுதல்படி, விஜயகுமாா், சுதீா் ஜேக்கப் ஆகியோா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.