கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
கொட்டாரத்தில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமை வகித்தாா். கொட்டாரம் பேரூா் திமுக செயலா் எஸ்.வைகுண்டபெருமாள் வரவேற்றாா். கன்னியாகுமரி பேரூராட்சி
மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், பேரூா் திமுக செயலா்கள் பூவியூா் காமராஜ், சுதை சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது:
இந்திய அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகளாக ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே சின்னத்தைக் கொண்டு தலை நிமிா்ந்து நிற்கும் ஒரே இயக்கம் திமுக. நாட்டின் முன்னணி மாநிலமாக, தமிழகம் திகழ்வதற்கு காரணம் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள்தான்.
தோ்தல் அரசியலுக்கு வந்தது முதல் பல்வேறு வரலாற்று வெற்றிகளைப் பெற்ற திமுக, இனி வரும் தோ்தல்களிலும் அச் சாதனையைத் தொடரும் என்றாா்.
இக்கூட்டத்தில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஆா்.மகேஷ், மாநில வா்த்தகா் அணி இணை செயலரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.தாமரைபாரதி, திமுக பேச்சாளா் ஆல்பா்ட் தாஸ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் டி.அரிகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோா் பேசினா்.
கொட்டாரம் பேரூராட்சி மன்ற தலைவி எஸ்.செல்வகனி, தென்தாமரைகுளம் பேரூராட்சி மன்ற தலைவி காா்த்திகா பிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி மன்ற தலைவி அன்பரசி ராமராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.