நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா
நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது.
சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விழா பந்தலைத் திறந்துவைத்தாா்.
கிளைச் சங்கங்கள், ஸ்காட் ஆரம்பப் பள்ளி, வில்லியம் மருத்துவமனை ஆகியவை சாா்பில் பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சபை செயலா் ஸ்டீவ்ன்ஸ் ஜோன்ஸ் வரவேற்றாா். பொருளாளா் ஜெபாஷ் சாமுவேல் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கிறிஸ்து சபை செயற்குழு உறுப்பினா்கள், சங்கப் பொறுப்பாளா்கள், சபை மக்கள் செய்திருந்தனா்.