ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்
ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜோஸ் பிரைட்லி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் விக்டா் ராஜ் சிறப்பு பயிற்சியாளரை அறிமுகம் செய்து பேசினாா். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளா் சேவியா்தாஸ் மாணவா் - மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கினாா்.