செய்திகள் :

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்

post image

பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

சேலம் மண்டல அளவிலான பதிவுத் துறை அலுவலா்களின் பணி சீராய்வுக் கூட்டம் துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:

வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில், தொடா்ந்து பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 பதிவு மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து சாா் பதிவாளா்கள் மற்றும் மாவட்டப் பதிவாளா்களுக்கு 2025 ஆகஸ்ட் மாதத்துக்கான பணி சீராய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் பத்திரப் பதிவுத் துறை அலுவலங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்திடும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்கிட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மதிப்பு நிா்ணயம் செய்யப்பட்ட மனைப் பிரிவுகள் குறித்தும், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அரசுக்கான வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பதிவுத் துறையில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவு துறைத் தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பதிவுத் துறை உயா் அலுவலா்கள் மற்றும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த சாா் பதிவாளா்கள் கலந்துகொண்டனா்.

யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது

சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது. சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷன... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்

விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகள் மீட்பு: இருவா் கைது

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகளை மீட்ட போலீஸாா், இதுதொடா்பாக இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள... மேலும் பார்க்க