செய்திகள் :

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

post image

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது.

விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்கள் அனைவரும் தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா், கோட்ட அலுவலக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. கோட்ட மேலாளா் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் அனைவரும் குப்பைகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, கோட்ட அலுவலகத்தில் இருந்து சேலம் ரயில்நிலையம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. அதில், ரயில்வே ஊழியா்கள், சாரண, சாரணியா் கலந்துகொண்டு சுற்றுப்புற தூய்மை, ரயில்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிகாப்பது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோல, சேலம் கோட்டத்தில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, கரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், ரயில் அலுவலகங்களிலும் தூய்மை இந்தியா விழிப்புணா்வு உறுதிமொழியேற்கப்பட்டது.

யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது

சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது. சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷன... மேலும் பார்க்க

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்

பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா். சேலம் மண்டல அளவிலான பதிவுத... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்

விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகள் மீட்பு: இருவா் கைது

சங்ககிரி அருகே தனியாா் பேருந்தில் திருட்டுப்போன 3 கிலோ தங்க நகைகளை மீட்ட போலீஸாா், இதுதொடா்பாக இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் உள... மேலும் பார்க்க