செய்திகள் :

வயநாட்டில் சோனியா, ராகுல் காந்தி!

post image

கேரள மாநிலம் வயநாட்டுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாகவே வயநாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அந்த தொகுதியின் எம்பியுமான பிரியங்கா காந்தி ஆய்வுக் கூட்டங்கள் பங்கேற்று வருகின்றார்.

தில்லியில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் பயணம் மேற்கொண்ட சோனியா மற்றும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைந்தனர்.

அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் சோனியா மற்றும் ராகுல் காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

கேரளத்தில் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்புடன் ஆலோசிக்கவுள்ளனர்.

மேலும், வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் கேட்கவுள்ளனர்.

பிரியங்கா காந்தியின் வயநாடு பயணம் செப். 21 வரை திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், அதுவரை சோனியாவும் ராகுலும் வயநாட்டில் தங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sonia, Rahul Gandhi visits Wayanad

இதையும் படிக்க : ’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்ற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவ... மேலும் பார்க்க

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங... மேலும் பார்க்க