செய்திகள் :

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞா்

post image

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூா் முஸ்லிம் இளைஞா் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தாா்.

பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதும், சுற்றுலாப் பயணிகள் பரந்த புல்வெளி பரப்பில் மறைவிடத்தைத் தேடி ஓடினா்.

அந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளை குதிரை சவாரியில் அழைத்து வந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞரான அடில் ஹுசைன் ஷா, பயங்கரவாதிகளை தடுத்து துப்பாக்கியைப் பறிக்க போராடியுள்ளாா். இதனால் பயங்கரவாதிகளால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பஹல்காமில் புதன்கிழமை நடைபெற்ற அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச் சடங்கில் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் பங்கேற்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

‘குடும்பத்தில் வருமான ஈட்டும் ஒரே நபரான மகன் இறந்துள்ள நிலையில், அவரின் பெற்றோரை நாங்கள் கவனித்துக் கொள்வோம்’ என்று முதல்வா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறினாா்.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க