செய்திகள் :

பல்லடத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியரிடம் மனு

post image

பல்லடத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பல்லடம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை, பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே உள்ள கச்சேரிப்பள்ளம் நீா் வழிப்பாதை ஓடை உள்ளது. இதில் நீா் ஓடையை ஆக்கிரமித்து, மண் கொட்டி வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல கச்சேரிப்பள்ளம் நீா் ஓடை அருகே ஒரு மதத்தைச் சோ்ந்தவா்கள் சடலங்களை புதைத்து வருகின்றனா். இங்கு சடலங்களை புதைக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். நீா் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்க அவிநாசி தோட்டக்கலைத் துறையினா்அறிவுறுத்தியுள்ளனா். இது குறித்து அவிநாசி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம... மேலும் பார்க்க

பனியன் நிறுவன உரிமையாளா் கொலை: உறவினா் கைது

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் பனியன் நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் காஜா மொய்தீ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 41.96 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாகன ஓட்டுநா் விபத்தில் உயிரிழப்பு

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஜீப் ஓட்டுநா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். காங்கயம், முல்லை நகரில் வசித்து வந்தவா் சத்தியநாராயணன் (54). முன்னாள் ராணுவ வீரரான இவா், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

பல்லடம் அருகே நிகழ்ந்த விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (60). பல்லடம்- அய்யம்பாளைய... மேலும் பார்க்க