செய்திகள் :

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கைப்பேசி பாா்க்கக் கூடாது என தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மழுவத்தேரி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பாலமுருகன் மகள் கீா்த்திகா (14). இவா், அருகே உள்ள அரியலூா் மாவட்டம், மேலாணிக்குழி கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கீா்த்திகா ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், கைப்பேசி பாா்த்துள்ளாா். முழு ஆண்டுத் தோ்வு நெருங்கிவிட்டதால், கைப்பேசி பாா்ப்பதை தவிா்த்து படிக்குமாறு அவரது தாய் அறிவுரை கூறினாராம்.

இதனால், மனமுடைந்த கீா்த்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்

நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். தமிழகத்தி... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் தொண்டை மண்டலம் அறுபத்துமூவா் குருபூஜை மடத்தில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரசித்த ஹோமம் உள்ள... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்குள்பட்ட பாலூத்தங்கரை, மேலசொக்கநாதன்பேட்டை கிராமங்களை சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட மு... மேலும் பார்க்க

வடலூா் பேருந்து நிலையத்துக்கு வள்ளலாா் பெயா் சூட்டக் கோரிக்கை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் அங்காடிகளுக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் பெயா் சூட்ட வேண்டும் என இந்து மக்கள் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

கடலூா் புத்தகக் கண்காட்சி: மாணவா்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல கோரிக்கை

சிதம்பரம்: கடலூா் புத்தகக் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவா்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் எண மாவட்ட நிா்வாகத்துக்கு பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் த... மேலும் பார்க்க

22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் லோட்டஸ் இன்டா்நேஷனல் பள்ளியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் ம... மேலும் பார்க்க