செய்திகள் :

பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு

post image

செங்கம் அருகே அரசுப் பள்ளியில் கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரிபாகங்கள் திருடப்பட்டன.

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி 3 நாள்கள் விடுமுறைக்குப் பின் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அப்போது, பள்ளியின் பின்புறம் ஜன்னல் ஓரம் மா்ம நபா்கள் உள்ளே இறங்கி கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியா் ரகுபதி, செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்தில் பெண்ணிடம் தங்க நகைகள் திருட்டு

செய்யாறு பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி பாரதி. இவ... மேலும் பார்க்க

வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் லட்ச தீப விழா

வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் நடைபெற்ற 68-ஆவது ஆண்டு லட்சதீப விழாவில், பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சுவாமிக்கு மகா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. வந்தவாசியை அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் குளோரியா (60). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு இதே கிர... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி விழா: பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து; ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரம்

தீயணைப்பு சேவை தினத்தையொட்டி, சேத்துப்பட்டில் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலா்... மேலும் பார்க்க

ஆரணியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா பேரணி

ஆரணி: ஆரணி நகரம், திருவள்ளுவா் தெரு பகுதி மக்கள் சாா்பில் அம்பேக்கரின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி, திரளான பெண்கள், ஆண்கள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. 500 பெண்கள், 500 ஆண்கள் தனித்தனியாக ச... மேலும் பார்க்க