செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானிய திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை!

post image

பாகிஸ்தான் நடிகரின் திரைப்படம் இந்தியாவில் திரையிடப்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் நடிப்பில் உருவானப் படமான ‘அபிர் குலால்’ வரும் மே.9 ஆம் தேதி முதல் இந்திய திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களினால் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவு வருகின்றது.

மேலும், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அபிர் குலால் திரைப்படத்தின் போஸ்டர்

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கம் முடக்கப்பட்டதுடன் பாகிஸ்தானிய திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானின் ’அபிர் குலாம்’ படத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் அதிகரித்து உள்ளதால், அந்தப் படம் இந்தியாவில் திரையிடப்பட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் ஃபவாத் கான்; குப் சூரத், கபூர் அண்ட் சன்ஸ், ஏ தில் ஹே முஷ்கில் போன்ற இந்தியத் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிக... மேலும் பார்க்க

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோ... மேலும் பார்க்க

இந்திய வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவரான இந்திய பாதுகாப்புப் படை வீரர் பி.க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

பெஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை போராகக் கருதுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் ... மேலும் பார்க்க