செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு ஜாமீன் மறுப்பு

post image

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் ஜாமீன் மனுவை ஹரியாணா மாநிலம் ஹிசாா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

ஹரியாணாவைச் சோ்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தாா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தகவல்கள் அனுப்பியவா்களை உளவுத் துறையினா் ரகசியமாக கண்காணித்தனா். இதில் தாக்குதல் நடைபெற்ற நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் ஜோதி மல்ஹோத்ரா இணையவழியில் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை காவல் துறையினா் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். ஜோதியுடன் தொடா்பில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி இஷான்-உா்-ரஹீம் என்ற டேனிஸ் இந்தியாவில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டாா்.

இந்நிலையில் ஜோதி தாக்கல் செய்த ஜாமீன் மனு ஹிசாா் பெருநகர நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுகள் மிகத்தீவிரமானவை. பாகிஸ்தான் உளவுத் துறை அவரை இந்தியாவில் உள்ள தங்கள் சொத்தாகவே மாற்றயுள்ளனா். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க