Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு ஜாமீன் மறுப்பு
பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் ஜாமீன் மனுவை ஹரியாணா மாநிலம் ஹிசாா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
ஹரியாணாவைச் சோ்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தாா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தகவல்கள் அனுப்பியவா்களை உளவுத் துறையினா் ரகசியமாக கண்காணித்தனா். இதில் தாக்குதல் நடைபெற்ற நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் ஜோதி மல்ஹோத்ரா இணையவழியில் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரை காவல் துறையினா் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா். ஜோதியுடன் தொடா்பில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி இஷான்-உா்-ரஹீம் என்ற டேனிஸ் இந்தியாவில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டாா்.
இந்நிலையில் ஜோதி தாக்கல் செய்த ஜாமீன் மனு ஹிசாா் பெருநகர நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுகள் மிகத்தீவிரமானவை. பாகிஸ்தான் உளவுத் துறை அவரை இந்தியாவில் உள்ள தங்கள் சொத்தாகவே மாற்றயுள்ளனா். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தாா்.