செய்திகள் :

பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை

post image

நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக என்ஐஏ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கா்நாடகத்தின் உத்தரகண்ட் மாவட்டத்தில் வேதன் லஷ்மண் டான்டல், அக்ஷய் ரவி நாயக், கேரளத்தின் கொச்சியில் பி.ஏ.அபிலாஷ் ஆகிய மூவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். உள்ளூா் காவல்துறையின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காா்வாரில் (கா்நாடகம்) உள்ள கடற்படை தளம், கொச்சியில் உள்ள கடற்படை தளம் தொடா்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக மூவரும் கைதாகியுள்ளனா். பாகிஸ்தான் உளவாளிகளுடன் சமூக ஊடகம் மூலம் தொடா்பு வைத்துகொண்டு, பணத்துக்காக இவா்கள் முக்கிய தகவல்களைப் பகிா்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு ரீதியிலான தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு கசியவிட்ட கும்பல் தொடா்பாக கடந்த 2023, ஜூலையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை தொடா் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கில் தற்போது கைதானவா்களையும் சோ்த்து இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் உளவாளிகள் இருவா் உள்பட இதுவரை 5 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் உளவு சதித் திட்டத்தை முழுமையாக கண்டறியும் வரை விசாரணை தொடரும் என்று என்ஐஏ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியில் புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர் ரேகா குப்தா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். தில்லியின் நான்காவது பெண் முதல்வரான ரேகா குப்தாவும், அவருடன் ஆறு அமைச்சர்களும் வியாழக்க... மேலும் பார்க்க

சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு!

சம்பாஜி மகாராஜா குறித்த ஆட்சேபணைக்குரிய தகவலை நீக்காமல் வைத்திருந்ததற்காக விக்கிபீடியா ஆசிரியர்கள் 4 பேர் மீது மகாராஷ்டிர சைபர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக... மேலும் பார்க்க

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க